பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் | அருட்தந்தை பிரின்டோ குரியாஸ்

வலுவற்றவர்கள் என்னும் சொல் பற்றியும் அது குறிப்பிடும் நபர்கள் பற்றியும் கடந்த இதழில் நாம் விரிவாகப் பார்த்தோம். இவ்விதழில், இந்தியாவில் நடைமுறையில் இருக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சட்டங்களைப் பற்றி நாம் பார்ப்போம்.

பெண்களுக்கான  சட்டங்கள்

இந்திய அரசியல் அமைப்பின் 14, 15, 15(3), 16, 39(a), 39(b),  39(c), 42 போன்ற விதிகள் பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் விதத்தில் வகுக்கப்பட்டுள்ளன.  அவற்றைப் பற்றிக் கீழே காண்போம்.

சட்டத்தின் முன் சம உரிமை

மதம், சாதி, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடின்மை.

பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் சிறப்புச் சட்டங்களை அரசு இயற்றுவதற்கான வழிவகைகள்.

வேலைவாய்ப்பில் சம உரிமை.

வாழ்வாதராத்திற்கான உரிமை

சட்ட உதவி செய்து கொடுத்தல்

வேலை இடங்களில் பேறுகால விடுமுறை

தேர்தல்களில் 1/3 உரிமை.

அரசியல் அமைப்பு தரும் இந்த உரிமைகளின் அடிப்படையில் பல சட்டங்களும் பெண்களின் பாதுகாப்பிற்காக இயற்றப்பட்டிருக்கின்றன. வன்புணர்வு, ஆள்கடத்தல், வரதட்சணை, குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல், பெண் குழந்தைகளைக் கடத்துதல் போன்ற சட்டங்கள் பெண்கள் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப் பட்டுள்ளன. இத்தோடு பல சிறப்பு சட்டங்களும் பெண்களின் பாதுகாப்பிற்காக அளிக்கப்பட்டிருக்கின்றன. 

பணியிடங்களில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் குறைத்தல்) சட்டம்.

பெண்களின் அநாகரீக பிரதிநிதித்துவம் (தடுப்பு)  சட்டம்.

தேசிய பெண்கள் ஆணையச் சட்டம்

சம ஊதியச் சட்டம்

பெண்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் நோக்குடன், ஒவ்வொரு மாவட்ட காவல் நிலைய மையத்திலும் பெண்களுக்கான அலகு செயல்படுகிறது. மாநில பெண்கள் ஆணையம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தேசிய ஆணையம் ஆகியவை பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் வண்ணம் செயல்படுகின்றன.


குழந்தைகளுக்கான சட்டங்கள்

இந்திய அரசியல் அமைப்பு பெண்களுக்கு அளிக்கும் உரிமைகளைப் போன்று குழந்தைகளுக்கும் உரிமைகளை அளிக்கிறது. 

ஆறு முதல் 14 வயது வரையிலான குழந்ைதகளுக்கு அடிப்படைக் கட்டாயக் கல்விக்கான உரிமை உண்டு (21A).

கடினமான வேலைகளில் 14 வயது வரை ஈடுபடுத்தக் கூடாது.

ஆறு வயது வரை கவனிக்கப்படுவதற்கான உரிமை உண்டு.

இவ்வாறாக அரசியல் அமைப்பு முன்வைக்கும் உரிமைகள் பிற்காலத்தில் வந்த பல சட்டங்களால் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

இளையோர் நீதிச் சட்டம், 

குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம், 

குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம், 

கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம்

போக்சோ

இச்சட்டங்கள் அனைத்தும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக தரப்பட்டிருக்கின்றன. மேலும், ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள்ளும் குழந்தைகள் உதவி மையம் செயல்படுகிறது.

நம்முடைய நாட்டில் ஏராளமான சட்டங்களும் அமைப்புகளும் உள்ளன. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆணையம் செயல்படுகிறது. இச்சடங்கள் அனைத்தும் தேவைப்படுவோருக்கு உதவியாக வர வேண்டும் என்பதே முக்கியம்.

Post a Comment

0 Comments